ஸ்ரீலங்காவின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில்வி க்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு கையெப்பம் திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பாக இன்று இறுதி முடிவெடுக்கப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு நகரவும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாறாயினும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்விற்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அவர் நேற்று பதவி விலகியுள்ள நிலையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.