All
கிழக்கு செய்திகள்
ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும்
கிழக்கு மாகாண சபை உட்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இதன் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபை உட்பட 9 மாகாண சபைகளினதும் கால எல்லையை நீடித்து ஒரே நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பாக நேற்றிரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது, கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்ற தெளிவான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த இந்த தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்கின்ற, ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை அதன் கால எல்லையை நிறைவடையும் போது கலைத்து விடுவது என்றும், எந்தக் காரணம் கொண்டும் அதற்கு கால நீடிப்பு வழங்குவதில்லை என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்
இந்த தீர்மானமானது பல மணி நேர கலந்துரையாடல்களுக்கு பின்னரே எடுக்கப்பட்டது.
ஆகவே, கிழக்கு மாகாண சபையானது உரிய நேரத்தில் கலைக்கப்படும். இது தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் போது அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கையினையும் மேற்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நல்லாட்சி அரசின் பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஆணைக்கு எதிராகவோ, ஜனநாயகத்துக்கு எதிராகவோ ஒருபோதும் செயற்பட மாட்டாது.
எனவே, கிழக்கு மாகாண சபையை தெரிவு செய்த மக்கள் தமது ஆணையை மீறி மேலதிகமாக ஒரு நாளை கூட வழங்கமாட்டார்கள் இதற்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.