Headlines
Loading...
ஐ.தே.க. மீது மைத்திரி நேரடித் தாக்குதல்!!

ஐ.தே.க. மீது மைத்திரி நேரடித் தாக்குதல்!!



கொழும்பு மாவட்ட மக்­கள், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு பல ஆண்டு கால­மாக வாக்­க­ளித்­த­போ­தும் கடந்த 25 ஆண்டு காலப் பகு­தி­யில் அந்த மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு வாக்­கு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட எந்­த­வொரு மக்­கள் பிர­தி­நி­தி­யும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார்.
புறக்­கோட்டை ஐக்­கிய வியா­பா­ரி­கள் சங்­கத்­து­டன் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார் அவர். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
மத்திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யில் சில பக்­கங்­களைக் காண­வில்­லை­யென சிலர் கூக்­கு­ர­லி­டு­கின்­ற ­னர். அதில் பக்­கங்­கள் எது­வும் குறை­வ­டை­ய­வில்லை.
சில சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­வரை அந்த ஆவ­ணங்­க­ளின் இர­க­சி­யத்­தன்மை பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனை வெளி­யி­டு­வ­தன் மூலம் குற்­றஞ் சுமத்­தப்­பட்­டி­ருப்­ப­வர்­கள் நன்மை அடை­வ­தற்குச் சந்­தர்ப்­பம் இருக்­கின்­றது.
மேலும், கொழும்பு மக்­கள் எதிர்­நோக்­கி­யி­ருக்­கும் பிரச்­சி­னை­க­ளுக்கு அவர்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட அனை­வ­ரும் பொறுப்­புக் கூற­ வேண் டும். நக­ரத்தை அழ­கா­க­வும் தூய்­மை­யா­க­வும் பேணுகின்ற அதே­நே­ரம் மக்­க­ளின் வாழ்க்­கையை அழ­கு­ப­டுத்­து­வது மிக­வும் அவ­சி­ய­மா­கும்.
புறக்­கோட்டை சிறிய மற்­றும் நடுத்­தர வியா­பா­ரி­க­ளி­ன­தும் நடை­பாதை வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­க­ளி­ன­தும் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு முறை­யான நிகழ்ச்­சித் திட்ட­ மொன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்­றார்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.